தொலைபேசியால் எரிந்த வீடு..!! நான்கு குழந்தைகள் மரணம்..!

திடீரென மொபைல் போன் வெடித்து சிதறியதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே மொபைல் போன் வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே பல்லவபுரத்தில் ஜானி என்ற கூலித்தொழிலாளி தனது வீட்டில் மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டிருந்தார்.அப்போது வீட்டில் சரிகா (10), நிகரிகா (8), சன்ஸ்கர் (6), களு (4) ஆகிய 4 குழந்தைகளும் மனைவி பபிதாவும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மொபைல் போன் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென குழந்தைகளை சுற்றியிருந்த போர்வைகளுக்கு பரவியது.இதில் குழந்தைகள் மற்றும் பபிதா ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.தீ விபத்து ஏற்பட்ட உடன், ஜானி தீயை அணைக்க தண்ணீர் எடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்ததால், அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 குழந்தைகள் உட்பட ஐந்து பேரையும் மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு நான்கு குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த பபிதா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *