மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்..!! 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-2-7.jpg)
மன்னா கத்தியால் தாக்கி மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த கணவர் 12 வருடங்களின் பின்னர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் 2012ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகாத போதிலும் பலப்பிட்டி நீதிமன்றம் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தலைமறைவான நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெலிகம விஹாரையொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.