14 வயது சிறுவனை தோட்டத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கிய தோட்டத்து உரிமையாளர்..!! நடந்தது என்ன.?

தோட்டத்திற்குள் ஆடு சென்று பயிர்களை நாசம் செய்ததால் குறித்த தோட்டத்தின் உரிமையாளர் அயல் வீட்டு 14 வயது சிறுவனை தோட்டத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.குறித்த சம்பவமானது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம் பெற்றுள்ளது.திருவையாறு கிளிநொச்சி மூன்றாம் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்திற்குள் அயல் வீட்டு ஆடு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதன் காரணமாக தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *