நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை காவு கொண்ட கடல்..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-1-5.jpg)
நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர்ழந்துள்ளார்.குறித்த சம்பவம் பமுனுகம, உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.24 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குழுவுடன் நீராடச் சென்ற போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.ராகம வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த கான்ஸ்டபிளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.