ஏழு வயது மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..!!

சில நாட்களுக்கு முன்னர், வவுனியா – சுந்தரபுரம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரால் தாக்கப்பட்டதில்,மாணவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவ தினத்தன்று பாடசாலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

பின்னர் சிறுவனின் தந்தை குறித்து ஆசிரியையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுவனை அடித்ததற்கான காரணம் என்ன என்றும், காலுக்கு கீழ் அடித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் குறித்த ஆசிரியை மீது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.இதேவேளை, ஆசிரியையால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி கிடைக்க விடாமல் ஆசிரியரை காப்பாற்ற பாடசாலையின் அதிபர் உள்ளிட குழுவினர் கடும் முயற்சியை எடுத்து வருதாக தெரியவருகின்றது.மேலும், சிறுவனின் தந்தைக்கு அழுத்தமும் அச்சுறுத்தலும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *