குற்றம் செய்து வெளிநாட்டில் இருந்தவர்கள் அதிரடியாக கைது..!! குற்றவாளிகளை இலங்கை அழைத்துவர ஏற்பாடு..!

13 இலங்கையர்கள் டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இலங்கை பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொரளை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *