மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி..!!மின்சார கட்டணம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-22.jpg)
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றயதினம் (21-02-2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது புதிய திருத்தத்தின் மூலம் நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை முற்றாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இலங்கை மின்சார சபை நாளைய தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும்.கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண அதிகரிப்பை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அரச நிறுவனங்களின் மின்சார கட்டணம் 24% அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.