பூனையால் நடந்த விபரீதம்..!! வீடு புகுந்து தாக்குதல்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-6-13.jpg)
அத்துரிகிரிய பிரதேசத்தில் அயலவர் வீட்டில் இருந்த வளர்ப்பு பூனையொன்று லொறி வண்டியில் சிக்கி உயிரிழந்ததில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.லொறி வண்டியில் வாள்களுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.மேலும்,நேற்று இரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறு பிள்ளையொன்று பூனை ஒன்றைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்ததாகவும், அப்போது அந்த பூனை அவர்களின் லொறியின் சில்லில் சிக்குன்டு உயிரிழந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.மேலும், தனது செல்ல பிராணியான பூனை உயிரிழந்தமை தொடர்பில் அவர்களை திட்டியதாகவும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட குழுவினர் வந்து தாக்கியதாகவும் வீட்டின் உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அதுருகிரிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.