வைத்தியர்கள் போல் நடித்து பெண்களை ஏமாற்றிய இரு வெளிநாட்டவர் கைது..!

நைஜீரியப் பிரஜைகள் இருவரை இலங்கை கணினி குற்றப் பிரிவினர் வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுசெய்துள்ளனர்.விசாரணையில், இருவரும் மூன்று பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி செய்துள்ளனர்.மேலும் கார் ஒன்றை வென்றுள்ளதாகவும் அந்தக் காரின் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இந்த நைஜீரியப் பிரஜைகள் மற்றொரு பெண்ணிடம் பண மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடிகள் வெவ்வேறு 3 சம்பவங்களில் இடம்பெற்றுள்ளன.குறித்த பெண்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை கைது செய்யும் போது 14 ATM அட்டைகள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *