பீடி தருமாறு கூறிவிட்டு பெண்ணொருவருக்கு அதிர்ச்சி கொடுத்த இருவர்..!!

பெண் ஒருவரின் தங்க சங்கிலியை வியாபார நிலையத்திற்குள் வைத்து இருவர் அறுத்து கொண்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வியாபார நிலைய உரிமையாளரான பெண்ணின் சங்கிலியே குறித்த சம்பவத்தில் திருடிச்செல்லப்பட்டுள்ளது.வவுனியாவில் பூந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

குறித்த கடைக்கு சென்ற இருவர் பீடி கொடுக்கும்படி கூறியதையடுத்து பீடி எடுத்து கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *