உயிரைப்பறித்த பன்றி இறைச்சி..!! இரண்டு கைதிகள் பலி..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-1-6.jpg)
பன்றி இறைச்சியை உட்கொண்ட இரு கைதிகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தகவல் தெரிவித்துள்ளார்.வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர்.இதனை உட்கொண்டவர்களில் மூன்று கைதிகள் சுகவீனமடைந்ததுடன் பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியின் வீட்டிலிருந்து குறித்த உணவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பன்றி இறைச்சி ஒவ்வாமை காரணமாக கைதிகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த உணவை உட்கொண்ட மேலும் 13 பேருக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படவில்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கைதிகள் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.