மக்களிடம் வவுனியா பொலிஸார் கோரிக்கை..!!அடையாளம் தெரிந்தால் அறியத்தரவும்..!

இன்று காலை புதன்கிழமை(10) அடையாளம் தெரியாத சடலமொன்று வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்த வகையில் பொலிஸார் பொதுமக்களிடம் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் .

குளத்தின் மேற்பரப்பில் காலணிகளும் காணப்பட்டதால் இந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்ட நபர் மஞ்சல் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *