500 ரூபவிற்கு ஆசைப்பட்டு இறுதியில் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை..!!

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 500 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றத்திற்கு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு ஆண்டுகால‌ கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த தகவலை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், நான்கு குற்றச்சாட்டுக்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்தார்.

இதனையடுத்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 ரூபாய் இலஞ்சத் தொகையையும் குற்றவாளியிடம் இருந்து வசூலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது