கனடாவிற்கு கற்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

கனடாவின் ஒன்றாரியோ கனடாவிற்கு கல்வி கற்கவரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.வெளிநாட்டு மாணவர்கள் கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு உள்வாங்கப்பட உள்ளனர்.குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இருப்பினும், 2023 இல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை விட அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க திட்டமிட்டுள்ள நிலையில், காத்திரமான முறையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான மாணவர் வீசா வழங்குவதில் ஒன்றாரியோ மாகாணம் கவனம் செலுத்தி வருகின்றது.

சர்வதேச மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்ராறியோ மாகாணத்தில் வேறு சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.