ஓ..பள்ளிக்கூடம் படிக்கும் போதே இந்த விளையாட்டு எல்லாம் நடந்திருக்கா..? நடிகை தமன்னா ஓப்பன் டாக்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-5-6.jpg)
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா.
சொல்லப்போனால் நடிகை தமன்னாவிற்கு திரை உலகில் பாரிய ரசிகர் படையே இருக்கின்றது என கூறலாம்.கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் தமன்னா.இந்த படம் ரசிகர் மத்தியில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும் அதைத்தொடர்ந்து, தமன்னா நடித்த படம்தான் கல்லூரி.
பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படத்தில் கல்லூரி மாணவி சோபிகா கேரக்டரில் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அதன்பிறகு விஜயுடன் சுறா, அஜீத் குமாருடன் விஸ்வாசம், கார்த்தியுடன் பையா, தோழா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, தனுஷூடன் படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமன்னா மாறினார்.ஏற்கனவே தெலுங்கு படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்த அனுபவத்தால், பாலிவுட்டிலும் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார்.ஹிந்தியில் பப்ளி பவுச்சர், பிளான் ஏ, பிளான் பி ஆகிய தமன்னா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தமன்னாவுக்கு கிடைத்தது.
தொடர்ந்து ஜீ கர்தா, லாஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களிலும் நடித்தார்.இவ்வாறு இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவாலா பாட்டுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டிருந்தார் இது தமன்னாவை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது என்றே கூறலாம்.காவாலா பாடல் தமன்னாவை மீண்டும் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாற்றி இருக்கிறது.இவ்வாறு இருக்க நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.அதில் தமன்னா கூறுகையில், பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் சேர்ந்து முதன் முறையாக 18+ படம் பார்த்தேன். அப்போது சிடி பிளேயரில் படங்கள் பார்ப்போம்.
அதில் 18+ படங்களின் சிடியும் இருந்தது அதை வேறு வழியில்லாமல் தோழிகளுடன் சேர்ந்து பார்த்தேன் அதை பார்க்கும் போது என் உடம்பெல்லாம் சில்லென ஆகிவிட்டது. உடம்பெல்லாம் மறுத்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டது என கூறியுள்ளார்.தமன்னா தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். ஆனால், இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது.