அண்ணனின் கொடூர தாக்குதலில் தம்பி உயிரிழப்பு..!!தப்பியோடிய அண்ணனை மடக்கி பிடித்த மக்கள்..!

தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.32 வயதான யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் சடலம் நேற்று காலை(12-04-2024) கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் தாக்குதல் நடத்திய அண்ணன் சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் (11-04-2024) மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இரவு அது கைகலப்பாக‌ மாறியுள்ளது.இதன்போது கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைபகுதியில் தாக்கி அண்ணன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தலை பகுதியில் பலத்த காயம் காணப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து அண்ணன் தப்பிச் செல்ல முயன்றபோது, நில்லம்பை பேருந்து நிலையத்தில் வைத்து ஊர் மக்கள் அண்ணனை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கலஹஹா பொலிஸார் மற்றும் கம்பளை இரசாயன தடயவியல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *