பொலிஸாரை வாளால் தாக்கிய தந்தை, மகன்..!! தந்தை மரணம்..!

பொலிஸார் அமைதியற்ற வகையில் செயற்பட்ட நபரை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மாவனெல்ல – பதியதொர பகுதியில் இடம் பெற்றுள்ளது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போது பொலிஸாரை சந்தேகநபர்கள் இருவரும் வாளால் தாக்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோதலுடன் தொடர்புடைய மகன் தப்பியோடியுள்ளார்.சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *