அடயாளாம் தெரியாத நபர்களால் தூப்பாக்கிச்சூடு..!! தேடுதல் முயற்சியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!

பொலிஸாரின் சிவில் சீருடை போல் ஒத்த உடையில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இன்று (19.02.2024) காலை குறித்த சம்பவம் இடம் பெற்ற நிலையில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னதாக, மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட வில்லை.எனினும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர்களுடன் தொடர்புடைய நபருக்கே இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *