ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! வழங்கப்படவுள்ள பணப்பரிசு..!

உலக தடகள சம்மேளனம் எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதனிடையே உலக தடகள சம்மேளனம் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெயரை பெற்றுள்ளது.குறித்த திட்டமானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், போட்டியில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கும் 2028ஆம் ஆண்டு முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக உலக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *