இரண்டு வருடங்களாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெரியப்பா..!! விசாரணையில் தெரிய வந்த உண்மை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-5-13.jpg)
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக அச்சிறுமியின் வீட்டில் சிறுமி பெரியப்பாவால் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.சிறுமியின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை அக்கம் பக்கத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையெனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின்போதே பெரியப்பாவின் தகாத செயல் தெரியவந்துள்ளது.
தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்த சிறுமி, வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என கூறியமை பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து சிறுமியின் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.