இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் தெரிவித்த மகிழ்ச்சியான தகவல்..!!

கடந்த செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும்போது எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர்,பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்தும் வகையில், சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை பாடசாலை மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதற்காக அரசாங்கத்தின் செலவு சுமார் ஒரு பில்லியன் ரூபாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஒரு வவுச்சர் அட்டையின் பெறுமதி சுமார் 1200 ரூபாவாகும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.