தீப்பிடித்து எரிந்த வீடு..ஒருவர் மரணம்..!! கைதான மனைவி மற்றும் கள்ள காதலன்..!

அம்பாறையில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் மரணமடைந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவத்தில் 39 வயதுடைய அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

 

நேற்று (2024.04.11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனடிப்படையில் இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *