கணவன் கொலை..!! மனைவியின் கொடூர செயல்..!!

பெண் ஒருவர் நித்திரையில் இருந்த கணவரை கொலை செய்து கிரிபாவ ஆற்றில் வீசியதாக குறித்த பெண்(மனைவி) சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச் சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதயகுமார என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய சந்தேக நபரான பெண், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை முதுகில் சுமந்து கொண்டுசென்று ஆற்றில் வீசியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் வெளியிவராத‌ நிலையில், சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிரிபாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *