புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையவழி விண்ணப்பம் ஜூன் 14 ஆம் திக‌தி மதியம் 12 மணிக்குப் பிறகு நிறுத்தப்படும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் திக‌தி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது.அரச பாடசாலைகள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் தேர்வில் பங்கேற்க முடியும்.

WWW.ONLINEEXAMS.GOV.LK என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *