தம்பியால் அண்ண‌ணுக்கு நடந்த சோகம்..!! இரத்தினபுரியில் அரங்கேறிய கொடூரம்..!

இரத்தினபுரி பிரதேசத்தில் இளைய சகோதரர் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை […]

பொலிஸ் உத்தியோகத்தரின் கொடூர செயல்..!! பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் பூசகர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய குற்றத்திற்காக கலென்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம் பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இருவரும் மேற்படி தேவாலயத்திற்குச் சென்று அங்கு இருந்த பூஷகரை வந்து பூஜை ஒன்று நடத்துமாறு கூறியுள்ளனர்.இந்நிலையில், குறித்த பூசகர. பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் சந்தேக நபர்கள் இருவரும் […]

சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தாய் மீது தாக்குதல்..!! நடந்தது என்ன..?

யாழ்.சிறைச்சாலையில் மகனுக்கு பீடி கொண்டு வந்த தாயொருவர் சிறைச்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறையில் இருக்கும் மகனைப் பார்க்க வந்த ஒரு வயதான தாய், அறியாமையால், மகனுக்குக் கொடுக்க‌ பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்கப்பட்டுள்ள தாயும் மகனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே சம்பவம் […]

ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை..!! மூன்று வாலிபர்கள் கைது!

18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை அடையாளம் காண பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சிறார் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச […]

வெளி நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கடும் உத்தரவு..!!

வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் பணம் சேகரிக்கும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும், வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி நிதி பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.அதேவேளை அநுராதபுரத்தை […]

போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்..!! யாழில் கொடூர சம்பவம்..!

கும்பல் ஒன்று ஒரு பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பருத்தித்துறை பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய‌ கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் தாயும் தந்தையும் உயிரிழந்ததையடுத்து, மேற்படி பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் மூத்த சகோதரி இறந்ததை அடுத்து ​​அவரது சகோதரன் அவரை தனது வீட்டிற்கு […]

கர்ப்பிணி மனைவியை கட்டிவைத்து எரித்த கணவன்..!! கொடூர சம்பவம்..!

பஞ்சாப் மாநிலத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்த மனைவியை கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தில் சுக்தேவ் தனது மனைவி பிங்கியுடன் வசித்து வந்துள்ளார். பிங்கி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் மற்றும் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளன.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுக்தேவ்விற்கும் அவரது மனைவி பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக […]

கைத் தொலைபேசியால் அரங்கேறிய கொலை சம்பவம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

வாழைச்சேனை பகுதியில் மொபைல் சண்டையால் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளது.43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்..!! இலங்கை தபால் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை..!

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதிகள் பெறப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், கமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் பெறப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.   போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரையும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது […]

காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் ஒருவருக்கு செய்த செயல்..!!பெண் வைத்திய சாலையில் அனுமதி..!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண் ஒருவரை தாக்கி பெண்ணின் பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரியவருகையில்,சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றில் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த காணியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் ஒருவரின் பற்களை உடைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ,கெப்பித்திகொல்லவ நீதிவான் நீதிமன்றில் கடந்த (13) ஆம் திகதி ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் […]