பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரணம்..!!பிரேதப் பரிசோதனையில் தெரியவந்த உண்மை..!

கம்பளை – நாவுல்ல பிரதேசத்தில் பாக்கு பறிக்கச் சென்ற போது மரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த இளைஞனின் பிரேத பரிசோதனையில் அவர் இரண்டு நாட்களாக பட்டினியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி.ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.துரதிஷ்டவசமாக கம்பளை நாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சாப்பாடு இல்லாமல் பசி தாங்க முடியாமல் பாக்கு பறிக்க சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *