சகோதரர்கள் இருவரின் மோதலில் இடையில் சென்ற அக்காவிற்கு நேர்ந்த கதி..!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்திகுத்துக்கு இலக்காகி சகோதரியும் சகோதரனும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவமான‌து யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய தெரிய வருகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தீர்க்க சகோதரி முயன்றுள்ளார்.இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *