ஆப்பிள் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!!

ஆப்பிள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி ஆப்பிள் பழத்தில் உள்ளது.தினம் ஒன்றுக்கு உடலுக்குத் தேவையான 14% வைட்டமின்கள் இதில் உள்ளதால், இதை தினமும் உட்கொள்ளல் உடலுக்கு நன்மையை தரும்.ஆப்பிளில் பெக்டின் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்.ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாப்பதுடன் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.ஆப்பிள் ஜூஸ் ஃபோலேட் குறைப்பாட்டை சரி செய்கிறது.

இது அல்சைமர் நோயைத் தூண்டும் புரதங்களின் செறிவைக் குறைக்கிறது. நரம்பியக்கடத்தியான அசிடைல்கொலின் அளவை இந்த ஜூஸ் பராமரிக்கிறது.ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.