மகளை தகாத முறையில் ஈடுபடுத்திய தந்தை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2023/12/accont-8.jpg)
தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.சந்தேகப்படும் இந்த நபர் சுமார் 2 வருடங்களாக தனது 12 வயது சிறுமியை தகாத முறையில் நடத்தி உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில்,
விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் குறித்த நபருக்கு 46 வயது எனவும், இவர் வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தை சேர்ந்தவர்,வவுனியா பம்பைமடு 17 ஆவது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.