டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக‌ டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகமானோர் இனங்கானப்பட்டுள்ளனர்

இந்த ஆண்டில் இதுவரை 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது, இவர்களில் 16,948 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 15,419 பேர் கம்பஹா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர். நாடு முழுவதும் 61 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் டெங்குவால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *