கொழும்பில் தொடர்ந்து வரும் கொலைச்சம்பவம்..!!

கொழும்பு பொலிஸார்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவமானது கொழும்பில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. 39 வயதான நபர் ஒருவர் ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளனஅண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பழி வாங்கும் நடவடிக்கை தீவரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *