கணவனை கட்டிவைத்து அந்தரங்க பகுதியில் சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி..!!
பெண் ஒருவர் தனது கணவனின் கை, கால்களை கட்டிவைத்து அவரின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இச் சம்பவமானது இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
கணவருக்கு போதைப் பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அவரை கட்டி வைத்து அந்த பெண் சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளை சுட்டு சித்ரவதை செய்துள்ளார்.ஏற்கனவே பல முறை கணவனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதனை தாங்க முடியாத கணவன், முன்னெச்சரிக்கையாக மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது, சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை கணவன் சி.சி.ரி.வி. கமெரா மூலம் பதிவு செய்துள்ளார்.
இதை ஆதாரமாக எடுத்துக்கொண்ட கணவர், கடந்த 5ம் திகதி மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.