பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் 10 வயது மாணவிக்கு செய்த செயல்..!!இப்படி பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-1-20.jpg)
தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியை தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரபல பாடசாலை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு நடாத்திவரும் குறித்த ஆசிரியர் மாணவியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதனையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலர் மாணவிகளிடம் இவ்வாறு ஒழுக்க கேடாக நடத்துகொள்வது ஒட்டுமொத்த ஆசிரியர்களியும் இழிவு படுத்தும் செயலாகும்.அதோடு மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் ஆசியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.