இலங்கை வாழ் மக்களுக்கு வர இருக்கும் மகிழ்ச்சி செய்தி..!டிசம்பர் மாத இறுதியில் கிடைக்கவுள்ள சிறந்த வாய்ப்பு..
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2023/11/Untitled-design-18.jpg)
டிசம்பர் மாத வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரையிலும், கண்டியில் இருந்து பதுளை வரையிலும் சிறப்பு தொடருந்து சேவைகள் சேர்க்கப்பட உள்ளன.
டிசம்பரின் நீண்ட வார இறுதியில் சனி 23, ஞாயிறு 24, திங்கள் 25 (கிறிஸ்துமஸ்), செவ்வாய் 26 (பௌர்னமி) ஆகிய தினங்களில் சிறப்பு விடுமுறை காணப்படுகின்றமையினால் அதிக தூரத்தில் இருந்து வந்து தங்கி நின்று வேலை செய்யும் மக்கள், பாடசாலை விடுமுறையை கொண்டாடும் பிள்ளைகள், பொது மக்களின் நலனுக்காக சிறப்பு தொடருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.