கைதான கணவனை விடுவிக்க மனைவி செய்த மோசமான செயல்..!! மனைவி அதிரடியாக கைது..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-3.jpg)
ஹெரோயின் போதை பொருளுடன் பிடிபட்ட தனது கணவரை விடுவிக்க ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் ஆடைகளை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, களுத்துறை – தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து கணவரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனை அடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையகத்தில் உள்ள பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.